Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் தேவகுரு குருபகவான் ... மோச்சேரி மோசூரம்மன் கோவிலில் தேரோட்ட விழா மோச்சேரி மோசூரம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கும்பாபிஷேக விழா : விக்ரகம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கும்பாபிஷேக விழா : விக்ரகம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2022
11:07

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூலை 6 ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் நேற்று தொடங்கின. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் தோற்றத்துடன் திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாள் கோயில் கட்டப்பட்டது. இங்கு பெருமாள் அனந்த சயனத்தில் காட்சியளிக்கிறார். நுாறாண்டுகள் கடந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. இந்தப் பணிகள் நிறைவு பெற்று வரும் ஜூலை 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையடுத்து ஒரு மாதமாக சிறப்பு பூஜைகள் நடந்து வந்த நிலையில் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. கணபதி ேஹாமத்துக்கு பின்னர் காலை 9:00 மணிக்கு மூலவர் திருமேனியை, திருப்பணி செய்த புரோகிதர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் சடங்கு நடந்தது. நேற்று காலை பாலாலய பிரதிஷ்டையில் இருக்கும் அர்ச்சனை விக்ரகம் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எழுந்தருளிய பின், மூலவர் சன்னதியில் பூஜைகள் தொடங்கியது.  காலை 8.30 மணிக்கு கோவில் தந்திரிகள் சஜித் சங்கர நாராயணகுரு, சுப்ரமண்யரு தலைமையில் ஆதிகேசவ பெருமாளுக்கு அர்ச்சனை, விக்ரகத்திற்கு பாலாலய சன்னதியில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வரும் 6ம் தேதி காலை 6:00 முதல் 6:50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.இக்கோயில் நுாற்றாண்டுகளைக் கடந்து கும்பாபிஷேகம் காண்பதால் திருவட்டார் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவட்டார் பகுதி டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் அடைக்கப்படுகிறது. கும்பாபிஷேக தரிசனத்துக்கு பாஸ் வழங்கப்படாது; முதலில் வருவோர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும், தாமதமாக வருவோர் கோயிலுக்கு வெளியே பெரிய திரையில் கும்பாபிஷேகத்தை காணலாம் என, தெரிவிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar