திருநெல்வேலி: ரெட்டியார்பட்டி கோயிலில் இன்று (10ம் தேதி) கொடை விழா துவங்குகிறது. வெங்கடேஸ்வரபுரம், ரெட்டியார்பட்டி தேவர், யாதவர், அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாட்டுடையார் சாஸ்தா கோயிலில் இன்று (10ம் தேதி) கொடை விழா துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று விளாத்திகுளம் ஆட்டம், கழுகுமலை செல்வராஜ் நையாண்டி மேளம் ஆகியன நடக்கிறது. நாளை (11ம் தேதி) நையாண்டி மேளம், பாட்டு கச்சேரி, வில்லிசை நடக்கிறது. மாலை 5 மணியளவில் பூக்குழி இறங்குதல் நடக்கிறது.