பதிவு செய்த நாள்
10
ஆக
2012
10:08
சேலம்: சேலம், குகை காளியம்மன், மாரியம்மன் கோவிலில், நேற்று வண்டி வேடிக்கை கோலாகலமாக நடந்தது.சேலம், குகை காளியம்மன், மாரியம்மன் கோவிலில், கடந்த வாரம் மாரியம்மன் பண்டிகை துவங்கியது. நேற்று முன்தினம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற, தீ மிதி திருவிழா நடந்தது. நேற்று, வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள், சிவன், பார்வதி, லட்சுமி, பிள்ளையார், முருகன் ஆகியோர் கைலசாத்தில் அமர்ந்திருப்பதை போலவும், ரதி மன்மதன் வேடம், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் வேடம் அணிந்தும், வண்டியில் ஊர்வலமாக சென்றனர்.மேலும், அர்ச்சுனன் வில் வித்தை அரங்கேற்றம், நரசிம்மன் அவதாரத்தில் கிருஷ்ணன், இரணியனை வதம் செய்தது. மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலட்சி வேடம், வள்ளி, தெய்வானை வேடம் ஆகியவை மிகவும் தத்ரூபமாக இருந்தது.மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை, 14 அலங்கரிக்கப்பட்ட மின் விளக்கு வாகனங்களில், பக்தர்கள், பல்வேறு வேடங்களை அணிந்து ஊர்வலமாக சென்றனர். சேலம் மாநகரின் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை, குழந்தைகளுடன் கண்டு களித்தனர்.