தேனி:தேனி வீரப்ப அய்யனார் மலையடிவாரத்தில், அல்லிநகரம் விவசாயிகள் சங்கம் சார்பில் மழை வேண்டி பிரார்த்தனை நடந்தது. ஆவலூர் தாத்தா, வீரப்ப அய்யனார், கருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாண்டியன், துணைத்தலைவர் வீரையாபிள்ளை, அல்லிநகரம் விவசாயிகள் சங்க தலைவர் அழகர்சாமி, பொருளாளர் முருகன், மாரியம்மன் கோயில் டிரஸ்டி சுப்புராஜ், லட்சுமிபுரம் கார்த்திகேயன், பொருளாளர் பரசுராம் பங்கேற்றனர்.