ஆடி வெள்ளி பூஜை : அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2022 05:08
சூலூர்: ஆடி வெள்ளியை ஒட்டி, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆடி மாத மூன்றாவது வெள்ளியான இன்று, சூலூர் வட்டாரத்தில் உள்ள மங்களாம்பிகை அம்மன் கோவில், சூலூர் அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. முத்துக்கவுண்டன் புதூர் மாகாளியம்மன் கோவிலில், அம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதேபோல், ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில், அரசூர் மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைத்து கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.