பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் நேற்று பெருமாள் சேஷ வாகனத்தில் அருள் பாலித்தார். ஆக. 8 அன்று இரவு பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக. 12 காலை தீர்த்த வாரி மற்றும் இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். விழாவையொட்டி கோயில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.