அவிநாசி : சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் குரு பூஜை திருவிழா நடைபெற்றது.
ஆடி மாதம் வெள்ளியன்று சுவாதி நட்சத்திரத்தில் வரும் நாளை குருபூஜை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அவிநாசி பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜை பெருவிழா நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை மற்றும் சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராண வரலாற்றை முறைப்படி பண்ணொன்ற முற்றும் ஓதுதல் முறையில் திருமுறை கலாநிதி கரூர் குமார.சாமிநாத தேசிகர் தலைமையில் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த ஓதுவ மூர்த்திகள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனர்.இதில் ஏராளமான பக்த பெருமக்கள் கலந்து கொண்டு காலை 7மணி முதல் மாலை 7 மணி வரை ஓதுவா மூர்த்திகளுடன் பாராயணம் செய்தனர். விழாவிற்குகான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டி செய்தார்.