பதிவு செய்த நாள்
07
ஆக
2022
03:08
பல்லடம்: ஆடி மாதத்தை முன்னிட்டு, மேற்கு பல்லடம் முத்துமாரியம்மன் கோவிலில், முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. மேற்கு பல்லடத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிவில், ஆடி மாத வழிபாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. ஆடிபூரம், ஆடி பெருக்கு, மற்றும் ஆடி வெள்ளி என, முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் இருந்து, என்.ஜி.ஆர்., ரோடு, என்.எச்.ரோடு, கொசவம்பாளையம் ரோடு வழியாக பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து, மூலவர் முத்து மாரியம்மனுக்கு புனித தீர்த்தங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.