கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2022 07:08
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புகழ்பெற்ற கூரைநாடு கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் பழமை வாய்ந்த கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான புற்றுடன் கூடிய நாக தோஷம் போக்கும் ஆலயமாக விளங்கிவரும் இந்த ஆலயத்தின் ஆடித்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் பத்தாம் நாள் திருவிழாவான இன்று தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்பாள் கோபுர வாசலுக்கு சர்வ அலங்காரத்தில் எடுத்துவரப்பட்டார். தொடர்ந்து விரதம் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இதனை எடுத்து சக்தி கரகம் உருமி மேளம் முன் செல்ல ஆலயத்தை வலம் வந்தது தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.