சங்கரன் கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2022 01:08
நெல்லை : நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் ஆடித்தபசு விழா கோலாகலமாக நடைபெற்றது.
சங்கரநாராயணர் திருக்கோயிலில் ஆடித்தபசு விழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி, அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆடித்தபசு திருவிழாவின முக்கிய நிகழ்ச்சியான சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவிலில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். 9ம் நாள் விழாவான இன்று இரவு 10.00 மணிக்கு அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆக. 10 தெற்குரதவீதியில் மாலை 5:30 மணிக்கு சிவபெருமான் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயண சுவாமியாக காட்சியளிக்கும் தபசு காட்சி நடக்கிறது