செல்லபிராட்டி அய்யனாரப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2022 02:08
செஞ்சி: செல்லபிராட்டி அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சியை அடுத்த செல்லபிராட்டியில் உள்ள பூர்ணகலா, புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு கோ பூஜை, சங்கல்பம், கும்ப அலங்காரம் மற்றும் யாகசாலை பூஜையும் நடந்தது. காலை 9.45 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும் காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. 10.30 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதன நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.