பதிவு செய்த நாள்
08
ஆக
2022
06:08
சென்னை, பன்னிரு திருமுறை மற்றும் தெய்வச் சேக்கிழார் விழா, நாளை 9ம் தேதி துவங்குகிறது.
மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் கோயிலில் பன்னிரு திருமுறை விழா நடைபெறுகிறது. திருமயிலை கபாலீச்சரத்தில் திருமுறை மண்டபத்தில் 09.08.2022 முதல் 20.08.2022 வரை ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணி முதல் திருமுறை விண்ணப்பமும் மாலை 7.00 மணி முதல் சொற்பொழிவு நடைபெறுகிறது.
நாளை 9ம் தேதி, மாலை, ஓதுவார்கள், சற்குருநாதன் மற்றும் வாகீசன், வரும், 10ம் தேதி சண்முகசுந்தர தேசிகர், 11ம் தேதி ஓதுவார் சிவக்குமார், 12ம் தேதி கரூர் சுவாமிநாதன், 13ம் தேதி ஓதுவார் சற்குருநாதன், 14ம்தேதி சுப்ரமணியன், 15ம்தேதி சுப்ரமணியன், 16ம் தேதி மகேஸ்வரன், சிவகுமார், 17 ம்தேதி சேகர், ரமேஸ்குமார், 18 ம்தேதி N.சுவாமிநாதன், 19ம் தேதி பொன்.முத்துகுமரன், 20ம் தேதி பாலமுருகன் போன்றோரின் திருமுறை இன்னிசை அரங்கு நடக்க உள்ளது. சொற்பொழிவில், முனைவர் சாரதா நம்பி ஆரூரன், பேராசிரியர் அருணை பாலறாவாயன், செந்தமிழ் அரசு சிவக்குமார், திருமந்திரச் செல்வர் பிரபாகரமூர்த்தி, திருமந்திர செல்வர் ரமணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். விழாவுடன், பன்னிரு திருமுறை, யானை ஊர்தியில் திருவீதி உலா நடைபெறும். மாலையில், சமயக்குரவர் நால்வருக்கும் சாந்தி அபிஷேகமும், திருமுறை இன்னிசையுடன் திருவீதி உலாவும் நடைபெறும்.