வாணியக்குடி முத்து மாரியம்மன் கோவில் பூக்குழி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2022 03:08
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி முத்துமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, பூக்குழி விழா நடைபெற்றது. முன்னதாக, விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து, கோவிலில் இருந்த முளைப்பாரிகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, குளக்கரையில் கரைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினால் செய்திருந்தனர்.