முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் 46ம் ஆண்டு பூச்சொரிதல் திருவிழா முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. வருஷாபிஷேகம் மற்றும் புண்ணியதானம் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான முதுகுளத்தூர் முருகன் கோயிலில் இருந்து காப்பு கட்டிய 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து காந்திசிலை, பஸ் ஸ்டாண்ட் ,வழிவிடு முருகன் கோயில், வடக்கூர் வழியாக செல்லிஅம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்பு அம்மனுக்கு பால்அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் செல்லிஅம்மன் திருவீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.