தாடிக்கொம்பு சவுந்தராஜப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2022 06:08
திண்டுக்கல் : தாடிக்கொம்பு சவுந்தராஜப்பெருமாள் கோயில்ஆடித்திருவிழா ஆக.4 ல் கொடியேற்றத்துடன்துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏழாம்நாளான நேற்று முன்தினம் சவுந்தரராஜ பெருமாள் சவுந்திரவல்லி தாயார் திருகல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை சுவாமி திருத்தேருக்கு புறப்பாடும், மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஆக்.14ல் தெப்ப தேரோட்டம் நடக்கிறது.