வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பவுர்ணமி வழிபாடு பக்தர்களின்றி நடந்தது.
இக்கோயிலில் மழையின் காரணமாக வனத்துறை அனுமதி மறுத்த நிலையில், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை தாணிப்பாறை மலையடிவாரம் வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு சூடமேற்றி, கோயிலை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் நேற்று மாலை 04:00 மணிக்கு மேல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சுந்தரமூர்த்தி, சுந்தரமகாலிங்கம், பிலாவடி கருப்பசாமி சன்னதிகளில் பவுர்ணமி வழிபாடு பூஜைகளை, கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.