ஆடி கடைசி வெள்ளி கிழமை : அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2022 12:08
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பெண் பக்தர்கள் திரளாக வந்திருந்து அம்மனை தரிசித்தனர்.
ஆடி மாதம் வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்னதானம், கூழ் காய்ச்சி ஊற்றுவது போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும். இன்று கடைசி வெள்ளி என்பதால் உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில், கம்பம் கவுமாரியம்மன் கோயில், சாமாண்டியம்மன் கோயில்களில் காலை முதல் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற வண்ணம் இருந்தது. பல கோயில்களில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து அம்மன் கோயில்களிலும் பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆடி கடைசி வெள்ளியையொட்டி உடுமலை கன்னிகாபரமேஸ்வரியம்மன் கோவிலில் தங்க கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். உடுமலை மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.