தென் திருமுல்லைவாயில் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2022 08:08
மயிலாடுதுறை: தென் திருமுல்லைவாயில் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா ஆயிரக்கணக்கானோர் தீமித்து நேர்த்திகடன் செலுத்தினர்.*
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென் திருமுல்லைவாயில் என்று போற்றக்கூடிய திருமுல்லைவாசலில் நூற்றாண்டுகள் பலனை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் தீமிதி திருவிழா ஆடி கடை வெள்ளி அன்று நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு தீமிதி திருவிழாவானது கடந்த 1 -ம் தேதி பந்தல் கால் முகூர்த்ததுடன் தொடங்கியது. தினம் தோறும் அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்ற வந்த நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் பூ குண்டம் இறங்கும் தீமிதி உற்சவம் ஆடி கடை வெள்ளியான இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடற்காரையில் இருந்து மேளத்தால மங்கள வாத்தியங்களுடன் சக்தி கரகம் எடுத்து வந்து முன்னதாக சக்தி கரகம் தீ குண்டத்தில் இறங்க பின்னர் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.