Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நகரமங்கலம் கிராம முளைப்பாரி விழா உலக நன்மைக்காக ராமேஸ்வரத்தில் 108 யாக குண்டத்தில் பூஜை உலக நன்மைக்காக ராமேஸ்வரத்தில் 108 யாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஆவணி பூஜைகள் தொடக்கம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஆவணி பூஜைகள் தொடக்கம்

பதிவு செய்த நாள்

18 ஆக
2022
07:08

சபரிமலை, சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் நேற்று தொடங்கியது. சபரிமலைக்கு உரிமைப்பட்ட இடம் அளவீடு செய்து கல் நாட்டும் பணியை நேற்று தேவசம்போர்டு தலைவர் தொடங்கி வைத்தார்.


ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை திறந்தது. அன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. நேற்று காலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் நெய்யபிேஷகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. வரும் 21–ம் தேதி வரை இந்த பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை உண்டு. 21–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மலையாள வருட பிறப்பான நேற்று முதல் அடுத்த ஆடி மாதம் வரை ஒரு ஆண்டு காலத்துக்கு சபரிமலை தந்திரியாக கண்டரரு ராஜீவரரு நேற்று பொறுப்பேற்றார். சபரிமலையில் தேவசம்போர்டுக்கு சொந்தமான நிலத்தை கையப்படுத்துவதில் வனத்துறை தொடர்ந்து தடையாக இருந்து வந்தது. இதனால் பல வளர்ச்சிப்பணிகளும் நடத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டு சபரிமலையில் தேவசம்போர்டுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கல் நாட்டி உறுதி செய்யும் படி தேவசம், வனம் மற்றும் வருவாய்துறைக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மூன்று துறையினரும் இணைந்து நிலத்தை அளவீடு செய்யும் பணியை சன்னிதானத்தில் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் நீண்ட காலமாக இருந்து வந்த வனம்–தேவசம்போர்டு மோதல் முடிவுக்கு வந்துள்ளது. கோர்ட் உத்தரவு படி பிரச்னை முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி என்று அனந்தகோபன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar