திருத்தணி முருகன் கோயில்: ஆடிக்கிருத்திகை வசூல் 2 கோடி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2012 04:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா வசூலாக ரூ. 2 கோடி 5 லட்சம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் ஆகஸ்ட் மாதம 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் அதனைத்தொடர்ந்து 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெற்றது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். 93,400 பேர் காவடி எடுத்து வந்தனர். 5 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் வசூலான பணம், கோயில் இணை ஆணையர் கவிதா, தக்கார் ஜெயசங்கர் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில், 1 கோடியே 31 லட்சம் கிடைத்தது. 484 கிராம் தங்கம், ஏழரை கிலோ வெள்ளி இருந்தது. சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையின் மூலம் ரூ. 74 லட்சம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ. 20 லட்சம் கூடுதல்ஆகும். மொத்தமாக ரூ. 2 கோடியே 5 லட்சம் வசூலாகி உள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ. 22 லட்சம் அதிகம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.