தலவிருட்சம் என்ற பெயரில் கோயில்களில் உள்ள மரங்களைப் பற்றி விளக்கவும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2012 02:08
ஒரு சில கோயில்களை மஹா ÷க்ஷத்ரம் என்று கூறுவார்கள். அப்படிப் போற்றப்படும் கோயில்களில், மூலஸ்தான மூர்த்தி சுயம்புவாகவோ (தானாகத் தோன்றியது) தேவர்கள் அல்லது முனிவர்களால் பிரதிஷ்டை செய்து பூஜித்ததாகவோ (காலத்தால் பழமை) வாய்ந்ததாகவோ இருக்க வேண்டும். இப்படிப்பட்ட இறைவனை ஆதிகாலத்தில் ஏதாவது ஒரு மரத்தின் கீழேயே வைத்து பூஜித்திருப்பார்கள். இந்த மரம் தான் தல விருட்சம் என்று போற்றப்படுகிறது. அக்கோயிலில் உள்ள இறைவனுக்கு உரிய சக்தியும் பெருமையும் இதற்கு உண்டு. இதனை வலம் வந்தாலே மூலஸ்தான மூர்த்தியை வழிபட்ட பலன் கிட்டும். ஒரு மகா÷க்ஷத்ரம் என்பது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையாலும் சிறப்புப் பெற்றிருக்கும். இவற்றில் தலம் என்று குறிப்பிடுவது தல விருட்சத்தைத் தான்.