லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் 24ல் சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2022 08:09
விழுப்புரம்: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, வரும் 24ம் தேதி, சிறுவந்தாடு லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாட்டில் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி, கடந்த 18ம் தேதி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை செய்து, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.வரும் 23ம் தேதி காலை மங்கள இசை சுப்ரபாதம், சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான வரும் 24ம் தேதி, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மூலவர் சிறப்பு தரிசனம், பெருமாள் கருட வாகன வீதி உலா நடக்கிறது.