பதிவு செய்த நாள்
22
செப்
2022
08:09
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், உலக அமைதிக்காக, தொண்டை நாட்டு திருத்தல ஓதுவாமூர்த்திகள் பங்கேற்ற, தேவார இன்னிசை நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
ஓதுவார் ஆராய்ச்சி அறக்கட்டளை, ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம், அமெரிக்க சைவ சிந்தாந்த சபை சார்பில், உலக அமைதி தினமான நேற்று, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தொண்டை நாட்டு திருத்தலங்களின் ஓதுவாமூர்த்திகள் பங்கேற்ற தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில், காஞ்சிபுரம் சிவ ராஜபதி, கதிர்வேல் சுப்ரமணியம், கச்சபேசம் தமிழ்செல்வன் உள்ளிட்ட தொண்டை நாட்டு திருத்தல ஓதுவாமூர்த்திகள், வயலின், முழவிசை, முகர்சிங், கஞ்சிரா ஆகிய பக்கவாத்திய கலைஞர்களுடன் இணைந்து, தேவார இன்னிசை நிகழ்த்தினர்.