கடலூர்: அரிசிபெரியாங்குப்பம், விஜயவள்ளி தாயார் ஸமேத ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஸ்வாமி கோயிலில் புரட்டாசி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, 24ம் தேதி சக்கரத்தாழ்வார் ஸ்வாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. வரும் புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு சக்கரத்தாழ்வார் ஸ்வாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. 8 ம்தேதி மாலை 6 மணிக்கு உற்சவர் ஸாரங்கபாணி ஸ்வாமி விசேஷ அலங்காரத்துடன் கருட சேவை திருவீதியுலா நடைபெறுகிறது. இத்திருக்கோயிலின் முக்கிய திருவிழாக்களின் ஒன்றான இந்த புரட்டாசி மாத உற்சவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அருளை பெற வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளனர்.