Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில் ... கனக முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கனக முத்து மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவில் சக்தி கொலு : கெஜலட்சுமி அலங்காரத்தில் அம்பாள்
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோவில் சக்தி கொலு : கெஜலட்சுமி அலங்காரத்தில் அம்பாள்

பதிவு செய்த நாள்

01 அக்
2022
09:10

 சென்னை, ": வடபழநி ஆண்டவர் கோவில் சக்தி கொலு விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார். வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. சக்தி கொலு ஐந்தாம் நாள் விழாவை அர்ச்சகர்களின் மனைவியர் மற்றும் உபயதாரர்கள் இணைந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

நேற்று, கெஜலட்சுமி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை லலிதா சகஸ்ரநா பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடந்தது.பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது. நேற்று இரவு, திருப்பூர் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடந்தது.இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு, நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நவராத்தரி பண்டிகை ஐந்தாம் நாளை முன்னிட்டு வேதவல்லி தாயார் சிம்ம வாகனத்தில் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தார்.

வேதவல்லி தாயாருக்கு தினசரி லட்சார்ச்சனையும், சிறப்பு அலங்கார வழிபாடும் நடக்கிறது.பூங்கா நகர்: கந்தசாமி கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஐந்தாம் நாளான நேற்று, திருவிளக்கு பூஜை நடந்தது.பக்தர்களுக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மணலி: மணலியில் உள்ள, பழமையான திருவுடைநாயகி சமேத திருவுடைநாதர் கோவிலில், நவராத்திரியின் ஐந்தாம் நாளான நேற்று மாலை, திருவுடைநாயகி மூலவர் தாயார், மகாலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

நவராத்திரி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் நடந்த சிறப்பு விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, நவராத்திரி திருவிழா நான்காம் நாளில், உற்சவ தாயார் கவுரி அலங்காரத்தில் நாக வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar