மாரியம்மன் கோவில் உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2012 11:08
கிருமாம்பாக்கம்: கிருமாம்பாக்கம் காலனி சோலைவாழியம்மன் கோவில் உற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.கிருமாம்பாக்கம் காலனி பகுதியில் விநாயகர், சோலைவாழியம்மன், கெங்காபவானி அம்மன், பூரணி பொற்கலை சமேத, அய்யனாரப்பன், முன்னடிவீரன் சுவாமிகளின் உற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காலை 6 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கரகம் அலங்கரித்து வருதல், பகல் 12 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. வரும் 29 மற்றும் 30ம் தேதி சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது. 31ம் தேதி மாலை தெப்பல் திருவிழா, இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. செப்.1ம் தேதி காலை 7.30 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.