பதிவு செய்த நாள்
27
ஆக
2012
11:08
திருநெல்வேலி: பொத்தைசுத்தி கோயிலில் வரும் 30ம் தேதி கொடை விழா துவங்குகிறது.பொத்தைசுத்தி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோயிலில் கொடை விழா வரும் 30ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. 30ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், இரவு 8 மணிக்கு கும்பாபிஷேகம், விளக்கு பூஜை நடக்கிறது.31ம் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், 10 மணிக்கு அம்மன் கோயிலில் இருந்து கொடி அழைத்து வருதல், மதியம் 12 மணிக்கு மதிய கொடை, தீபாராதனை, 2 மணிக்கு சக்தி விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், மாலை 5 மணிக்கு பால் அபிஷேகம், இரவு 8 மணிக்கு சுவாமி அழைத்து வருதல், 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12 மணிக்கு சுவாமி மயானம் போய் வருதல், 12.30 மணிக்கு கனியான் கைவெட்டு, நாக்குவெட்டு பூஜை நடக்கிறது. செப்.1ம் தேதி காலை 6 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 10 மணிக்கு சுவாமி வீதிவலம் வருதல், மதியம் 12 மணிக்கு பொங்கல் வழிபாடு மற்றம் படைப்பு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.