திண்டுக்கல்: ராமநாதபுரம் ராமர் கோயிலில் நாளை(ஆக.29) கும்பாபிஷேகம் நடக்கிறது. வேடசந்தூர் வெம்பூர் அருகே ராமநாதபுரத்தில் ராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் பஜனை மடமாக அமைக்கப்பட்டது. இக்கோயிலில் அயோத்தி ராமர் கோயில் போன்று கோபுரங்களும், நூதன கல் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பணி நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதான நேற்று மாலை மங்கள இசை, மகா சங்கல்பம், பூண்யாவாசனம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகளும் முதல் கால யாக பூஜையும் நடந்தது. இன்று காலை முதல் விமான கலச நிர்மானம், பூஜைகள் கலச நிர்மானம், யந்திரபிரதிஷ்டை மூர்த்தி சிலைகள் பிரதிஷ்டை, திருமஞ்சனம் உட்பட இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற உள் ளது. நாளை காலை 7 மணிக்கு யாக பூஜைகள் நிறைவடைந்து, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்படும். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.ஏற்பாடுகளை வெம்பூர் கிராமம் ராமநாதபுரம் ஊர் பொது மக்கள் செய்துவருகின்றனர்.