பழநி: பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில், ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடந்தது. விழாவின் முதல்நாளான நேற்று காலை 6 மணிக்கு சிம்ம லக்னத்தில் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள், அர்ச்சனை செய்து கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இரவு 7 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆவணி பிரம்மோற்சவ விழாவையோட்டி கோயிலில் தினமும் கலைநிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்துள்ளனர்.