Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஒருவேளை அன்னதானம் வழங்க ... சபரிமலையில் ஆறு நாட்களில் 2.62 லட்சம் பக்தர்கள் தரிசனம் சபரிமலையில் ஆறு நாட்களில் 2.62 லட்சம் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
குவியும் பக்தர்கள்: சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
குவியும் பக்தர்கள்: சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

23 நவ
2022
07:11

சபரிமலை, கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில், மாத பூஜையின் போது, நடை காலை 5:00 மணிக்கு திறக்கப்படும். தற்போது மண்டல பூஜை, மகரஜோதி சீசனையொட்டி, இது அதிகாலை 3:00 மணிக்கு மாற்றப்பட்டது. மாலையில் 5:00 மணிக்கு பதிலாக 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு வந்தது. தற்போது இது 3:00 மணியாக மாற்றப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் ஒரு நாளில் பக்தர்கள் 18 மணி நேரம் தரிசனம் செய்ய முடியும்.

இதனால், பக்தர்களின் காத்திருப்பு நேரம் மேலும் குறையும் என தேவசம்போர்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மதியம் உச்ச பூஜை முடிந்து நடை அடைத்த பின், பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்தது ஒரு மணி நேரம் குறைந்துள்ளது. ஆன்லைன் வாயிலான முன்பதிவு கார்த்திகை பிறந்த பின் விறுவிறு என அதிகரித்து வருகிறது. இதை கவனித்து தேவசம் போர்டு அதிகாரிகளும், போலீசாரும் ஆலேசனை நடத்தி, நடை திறக்கும் நேரத்தை அதிகரித்துள்ளனர்.

அப்பம், அரவணைக்கு 18 கவுன்டர்கள் திறப்பு: சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதமான அப்பம், அரவணை வாங்க 18 கவுன்டர்கள் உள்ளன. இதில் ஐந்து கவுன்டர்களில் பிரசாதம் ஆன்லைன் பண பரிமாற்றம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக, 18ம் படிக்கு வலது பக்கம் இதற்காக 11 கவுன்டர்கள் செயல்படுகின்றன. இதில் ஐந்து மற்றும் ஏழாம் கவுன்டர்களில் கிரிடிட், டெபிட் கார்டுகள் மற்றும் யு.பி.ஐ., உள்ளிட்ட ஆன்லைன் வாயிலான பணபரிமாற்றம் மூலம் பிரசாதம் வழங்கப்படும். www.sabarimalaonline.org என்ற இணைய தளத்தில் பிரசாதம் முன்பதிவு செய்து வருபவர்கள் ஆறாம் எண் கவுண்டரில் பிரசாதம் பெற்று கொள்ளலாம். இவற்றுடன் மாளிகைப்புறம் கோயில் அருகே மூன்று, அன்னதான மண்டபம் அருகே நான்கு கவுன்டர்கள் செயல்படுகின்றன. இதில் தலா ஒரு கவுண்டர் ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் இ - காணிக்கை செலுத்த வசதியாக, சன்னிதானம் கீழ் திருமுற்றத்தில் அமைந்துள்ள மகா காணிக்கையிலும், கோவிலின் வலது பக்கம் பிரசாதம் கொடுக்கும் இடத்திலும் கியூஆர் கோடுகள் வைக்கப்பட்டுள்ளன.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar