காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் தென்கயிலாயமாக பக்தர்களால் போற்றப்படுகின்றன.
இந்நிலையில் கார்த்திகை மாதம் சிவ பார்வதிகளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதால் இம்மாதம் (நவம்பர்) 13ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை 10 நாட்கள் இன்று புதன்கிழமை வரை லட்ச வில்வ அர்ச்சனை லட்சஷ குங்கும அர்ச்சனை சிறப்பு பூஜையின் இறுதி நாளான இன்று புதன்கிழமை கோயிலில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டதை தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு முதலில் கணபதி பூஜை, புன்னியா வசனம் செய்தனர். கலசத்திற்கு சிறப்பு புஷ்பங்களால் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழுக்கப்பட்டு பிரதான கலச ஜலத்தைக் கொண்டு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரின் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தினர் . மேலும் அலங்கார மண்டபத்தில் இருந்து கடந்த 10 நாட்களாக நடத்திய லட்ச வில்வ குங்கும அர்ச்சனையில் பயன்படுத்திய பூஜை பொருட்களைமேள தாளங்கள் மங்கல வாத்தியங்களுடன் கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தலைமீது சுமந்து ஊர்வலமாக கொண்டு சென்று சொர்ணமுகி ஆற்றில் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆற்றில் பூஜை பொருட்களை நிமஞ்சனம் செய்தனர் இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு அரங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.