புதுச்சேரி: புதுச்சேரி, சின்னசுப்ராயபிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.