Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழா ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் முருகர் தேர் வெள்ளோட்டம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » திருக்கார்த்திகை தீபம் 2022
திருவண்ணாமலை தீப திருவிழா: காவல் தெய்வம் பிடாரி அம்மனுக்கு உற்சவம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா: காவல் தெய்வம் பிடாரி அம்மனுக்கு உற்சவம்

பதிவு செய்த நாள்

26 நவ
2022
08:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், விழா இனிதே நடக்க வேண்டி, கோவில் காவல் தெய்வமான பிடாரி அம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டு, அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நாளை நடக்க உள்ளது.  நேற்று கோவில் காவல் தெய்வமான பிடாரி அம்மன் மற்றும் சப்த கன்னிமார்களுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு,  சாதம், காய்கறி, வடை, பாயசம், வைத்து படையலிடப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, சிம்ம வாகனத்தில், பிடாரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மேலும் விழாவில்  இன்று, நடக்கும் விநாயகர் உற்சவத்தில், அநுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்ஹிரகணம் வழிபாடு நடத்தப்பட்டு விநாயகர், மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு மாட வீதி உலா வந்து  பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.  

நாளை கொடியேற்றம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும், தீப திருவிழா நாளை,  கொடியேற்றத்துடன் முதல் நாள் விழா தொடங்குகிறது.  நாளை  அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன், மற்றும் உற்சவர்  பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு  சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை  செய்யப்பட்டு, பஞ்ச மூர்த்திகள், சுவாமி தங்க கொடி மரம் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.  தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட   சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க,  63 அடி உயர  தங்க கொடி மரத்தில், சதுர்த்தி திதி, பூராட நட்சத்திரம், சித்தயோகம் கூடிய காலை, 5:30 மணிக்கு மேல்,  7:00 மணிக்குள்,  விருச்சிக லக்னத்தில்  கொடியேற்றம் நடக்க உள்ளது. முக்கிய விழாவான, ஏழாம் நாள் விழாவான, டிச., 3ல், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம்,  வரும், டிச., 6ல்,  அதிகாலை, 4:00,  மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00, மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.  இந்த மஹா தீபத்தை, 2,500பக்தர்கள் மட்டும் மலை உச்சிக்கு சென்று தரிசனம் காண அனுமதிக்கப்படுவர்.

 
மேலும் திருக்கார்த்திகை தீபம் 2022 »
temple news
திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு முதல் நாள் உற்சவத்தில், அய்யங்குளத்தில்  உண்ணாமுலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் நாளை ஏற்றப்பட ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த எட்டாம் நாள் தீப திருவிழாவில், சந்திரசேகரர், பிரம்மாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar