பகவான் யோகி ராம் சுரத்குமார் மகாராஜின் 104 வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2022 03:12
திருக்கோவிலூர்: பகவான் யோகி ராம் சுரத்குமார் மகாராஜின் 104 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிஷ்டானத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 104 வது ஜெயந்தி விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 7:00 மணிக்கு பிரதான் மந்திரில் ஏகாதசருத்ர பாராயண சகிதருத்ர ஹோமம், வசோதாரா பூர்ணாகுதி, அதிஷ்டானத்தில் மகாஅபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாம சங்கீர்த்தனத்துடன் பஜனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு விதூஷி அர்ச்சனா, ஆரத்தி குழுவினரின் வாய்ப்பாட்டு, பகவான் உற்சவமூர்த்தி பள்ளக்கில் பிரதான்மந்திர் உள்ளே உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் செய்திருந்தனர்.