பதிவு செய்த நாள்
01
டிச
2022
04:12
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் சம்பக சஷ்டி விழாவையொட்டி, நிறைவு நாள் அன்று பைரவர் அர்த்தநாரீஸ்வரராக அருள் பாலித்தார்.
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 20 ம் ஆண்டு சம்பக சஷ்டி விழா நவ., 23 ல் துவங்கியது. தினமும் பைரவருக்கு விபூதி காப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை சாத்தி, சந்தனம் மற்றும் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் காலை ஹோமம், அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நவ., 23 அன்று சம்பக சஷ்டி ஓம் அதி சந்துஷ்ட பைரவயாகம், மறுநாள் அஷ்ட வித்தியாசனை, புஷ்பாஞ்சலி நடந்தது. நவ., 30 காலை பைரவருக்கு வெள்ளிக் கவசம் சாற்றி, பாவாடை நைவேத்தியம் நிறைவடைந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இரவு 7:00 மணிக்கு பைரவருக்கு, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு, ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு மகா தீபாராதனையுடன் விழா நிறைவடைந்தது.