Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பம்பையில் குளிக்க கட்டுப்பாடு : ... சபரிமலை பக்தர்களுக்கு உதவ அதிவிரைவு ஆம்புலன்ஸ் வசதி சபரிமலை பக்தர்களுக்கு உதவ அதிவிரைவு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை ரோப் கார் திட்டம் இழுபறி: வனத்துறை எதிர்ப்பால் திணறல்
எழுத்தின் அளவு:
சபரிமலை ரோப் கார் திட்டம் இழுபறி: வனத்துறை எதிர்ப்பால் திணறல்

பதிவு செய்த நாள்

02 டிச
2022
08:12

சபரிமலை:வனத்துறையின் கடுமையான எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் சபரிமலை ரோப் கார் திட்டம் இழுபறியில் உள்ளது. டிராக்டர்கள் இயக்கப்படுவதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

சபரிமலைக்கு தேவையான பொருட்களை முன்னோர் கழுதை சுமையாக, பின் மனித தலைசுமையாக கொண்டு சென்றனர். கழுதைகளின் கழிவுகளால் சபரிமலை அசுத்தமானது. இதையடுத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிராக்டரில் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. சபரிமலை சீசன் காலத்தில் பக்தர்களின் கூட்டத்துக்கு மத்தியில் டிராக்டர்கள் இயக்கப்படுவது பல சிரமங்களை ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க 2015ல் பம்பை- சன்னிதானம் இடையே ரோப்கார் இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 2019ல் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் வனத்துறையினர் கடும் எதிர்ப்பால் சர்வே பணியுடன் திட்டம் நிற்கிறது, தேவசம் போர்டுக்கு அப்பம், அரவணை தயாரிப்புக்கு மட்டும் ஆண்டுக்கு 30 லட்சம் கிலோ சர்க்கரை, ஏழு லட்சம் கிலோ அரிசி கொண்டு செல்ல வேண்டியுள்ளது. கட்டுமான பொருட்கள், வியாபார ஸ்தாபனங்களுக்கான பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும். இதற்காகதான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. 2.98 கி.மீ., துாரத்தில் 12 மீ., அகலத்தில் பாதை ஏற்படுத்தி ஏழு துாண்கள் அமைக்க வேண்டும். பம்பை ஹில்டாப்பில் துவங்கி சன்னிதானத்தில் போலீஸ் குடியிருப்பு கட்டடத்தின் அருகில் நிறைவு பெறும். பெரும்பாலும் இந்த இடங்கள் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் வருகிறது. இதற்காக 1300 மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும். பெரியாறு வனவிலங்குகள் சரணாலயத்தில் இப்பகுதிகள் வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என வனத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன் பெய்த பெருமழையில் பம்பை ஹில்டாப்பில்மண்சரிவு ஏற்பட்டதால் இங்கு திட்டம் தொடங்குவது பாதுகாப்பானதல்ல என்றும் வனத்துறை கூறுகிறது. வெட்ட வேண்டிய மரங்களின் எண்ணிக்கையை குறைத்து, சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்து புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும் எனவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சபரிமலையில் ரோப்கார் திட்டம் சாத்தியமாகும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar