கும்பாபிஷேகத்தில் தவறுகள் ஏற்பட்டால் பரிகாரத்தின் மூலம் சரி செய்யலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2023 05:02
பழநி: பழநி வந்த ஈரோடு ஆதீனம் கோயிலில் கும்பாபிஷேகத்தின் போது சில தவறுகள் நடந்தால் பரிகாரத்தின் மூலம் சரி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
பழநி வந்த ஈரோடு ஆதீன சிவாச்சாரியார் கூறுகையில், "பழநி கோயில் கும்பாபிஷேகத்தின் போது சில அரசியல்வாதிகள் கோயிலுக்குள் சென்றதாக கூறுகின்றனர். இதில் கோயில் நிர்வாகத்திற்கு எந்த தவறும் இல்லை, அங்கு இருந்த அர்ச்சகர்கள் அனுமதித்துள்ளார்கள். கோயில் கும்பாபிஷேகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். கும்பாபிஷேகத்திற்கு முன் ஸ்தபதிகள் உட்பட பலர் சென்று வருகின்றனர். இதற்கு கும்பாபிஷேகத்தின் போது பிம்பசுத்தி செய்தால் போதுமானது. மேலும் கும்பாபிஷேகத்தின் போது தவறு ஏற்பட்டால் கோடி அர்ச்சனை செய்து சரி செய்யலாம். கோயில் நிர்வாகம், தங்கத் தொட்டில் குழந்தைகளை வைப்பதை கட்டிடம் இல்லாமல் இலவசமாக வேண்டும் குழந்தைகளும் தெய்வமும் ஒன்று எனவே குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தால் நாடு நலம் பெறும்." என்றார். அவருடன் வந்த வழக்கறிஞர் சூரிய கண்ணன் கூறுகையில்,"பழநி கோயிலில் நடைபெறும் மண்டல பூஜையை கோயில் நிர்வாகம் நடத்தாமல் மண்டக படிகளை உபயமாக ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்."என்றார்.