சதுரகிரி மலையில் தண்ணீர் பஞ்சம்: தவிக்கும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2012 11:09
சதுரகிரி மலை மூலிகைகளுக்குப் பெயர் போன மலை. சித்தர்கள் இன்றும் நடமாடும் தவபூமி, சிவ வழிபாட்டிற்கு, மனதுக்கு இதமான இயற்கையின் அரவணைப்போடு மேற்குத் தொடர்ச்சி மலையில் சுந்தரமகாலிங்க சுவாமி சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இந்த மலையில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்களால் பௌர்ணமி, அமாவாசை தினங்களில் நிரம்பி வழிகிறது. தற்போது சதுரகிரி மலையில் நிலவும் வறட்சியால், பக்தர்கள் தண்ணீருக்கு மிகவும் திண்டாடுகின்றன. பக்தர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் நீருக்கு தாகத்துடன் தவிக்கும் நிலையில் உள்ளன.