பதிவு செய்த நாள்
07
செப்
2012
02:09
புரட்டாசி: பிறரது ஆலோசனையை மதித்து நடக்கும் மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன், நீதி கிரகமான சனிபகவானுடன் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் உள்ளார். குடும்ப உறுப்பினர்களிடம் நல்லதைப் பேசினால் கூட மனக்கசப்பு, பிரிவு ஏற்படலாம். பொது இடங்களில் இதே குணம் பின்பற்றுவதால் வம்பு, விவகாரம் வரலாம். கவனம் தேவை. சுக்கிரன், செவ்வாய், ராகு உங்கள் வாழ்வு வளம்பெற தேவையான நற்பலன் தருவர். இளைய சகோதர வகையில் மங்கல நிகழ்வு உண்டு. வீடு, வாகனத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி மாற்றம் செய்ய வேண்டாம். பூர்வசொத்தில் கூடுதல் பணவரவு கிடைக்கும். புத்திரர்களின் பிடிவாதச் செயல் மனவருத்தம் தரலாம். அவர்களைக் கண்டிப்பதில் நிதானம் அவசியம். ஆறாம் இடத்தில் செவ்வாய், ராகு அனுகூலமாக உள்ளதால் எதிர்ப்புக்களை எளிதில் வெல்வீர்கள். கூடுதல் சொத்து வாங்க சிலருக்கு யோகம் உண்டு. உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். தம்பதியர் ஆன்மிக வழிபாடுகளை நிறைவேற்ற அனுகூல சூழ்நிலை உண்டு. குடும்பத்தில் ஒற்றுமையும் பெருமிதமும் நிறைந்திருக்கும். தொழிலதிபர்கள் இடர்ப்பாடு விலகி உற்பத்தியின் அளவு மற்றும் தரத்தை உயர்த்துவர். வியாபாரிகள் விற்பனையில் முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள் சக பணியாளர்களிடம் சுமூக நட்பு கொள்வது நல்லது. குடும்பப் பெண்கள் குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க தகுந்த திட்டங்களைத் தீட்டுவர். பணிபுரியும் பெண்கள் கவனத்துடன் செயல்பட்டு பணிகளை வேகமாக நிறைவேற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டு. விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு பெறுவர். அத்தியாவசியத்தேவை நிறைவேற சீரான பணவசதி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமும் தேர்ச்சியும் அதிகரிக்கும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.
உஷார் நாள்: 24.9.12 இரவு 9.43- முதல் 27.9.12 அதிகாலை 2.15.
வெற்றி நாள்: அக்டோபர் 2, 3
நிறம்: வெள்ளை, சந்தனம் எண்: 3, 6.