Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி!
செப்டம்பர் 08,2012
அ-
+
Temple images

நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆண்டுத் திருவிழா ஆக., 29ல் துவங்கியது.  தினமும் மதியம் 12 மணிக்கு தேவாலய முகப்பில் கொடியேற்றப்பட்டு, தேவாலய மேல், கீழ் ஆலயங்களில் பல்வேறு மொழிகளில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசிர்வாதம், மாதாவின் திருத்தேர் பவனி நடந்தன. நேற்றிரவு, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் 20 பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டுப்பாடல் திருப்பலியும், பெரிய சப்பர பவனியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு பேராலய வளாகத்தில் ஏற்றப்பட்டிருக்கும் மாதாவின் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.