அன்னூரில் ஆயிரம் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2023 03:03
அன்னூர்: அன்னூரில் நடந்த திருவாசகம் முற்றோதலில், ஆயிரம் சிவனடியார்கள் பங்கேற்றனர்.
திருவாசகம் முற்றோதல் கட்டளை சார்பில், அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் இன்று காலை 6:00 மணிக்கு கயிலை வாத்தியத்துடன் 63 நாயன்மார்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:30 மணிக்கு, திருவாசகத்தை முழுவதும் பாடும் திருவாசகம் முற்றோதல் துவங்கியது. சிவனடியார் திருக்கூட்டத்தினர் வாத்திய இசையுடன் திருவாசகத்தை பாடினர். பக்தர்கள் திருவாசகத்தை உடன்பாடினர். காலை துவங்கி மாலை வரை திருவாசகம் முழுமையாக பாடப்பட்டது. சிவனடியார்கள் பேசுகையில், திருவாசகத்தில் தினமும் ஒரு பாடலை விளக்கத்துடன் வீட்டில் வாசிக்க வேண்டும். திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருக மாட்டார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. குழந்தைகளுக்கும் திருவாசகத்தை கற்பிக்க வேண்டும், என்றனர். விழா ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி உள்பட கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரம் சிவனடியார்கள் பங்கேற்றனர்.