Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காய்கறி அலங்காரத்தில் வராகி அம்மன் ... ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி பாலாலயம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 மார்
2023
01:03

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் பூமி நீளா சமேத சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலுக்கு 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் 108 வைணவத் தலங்களுல் முதன்மையானது. மூலவர் சன்னதி அஷ்டாங்க விமானத்தை பெற்ற சிறப்புடையது. இந்த விமானத்திலிருந்து பொதுமக்களுக்கு திருமந்திரத்தை ராமானுஜர் உபதேசித்த பெருமைக்குரியது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலம் ஆகும். தேவர்களை துன்புறுத்திய அசுரன் இரண்யனை வதம் செய்ய விஷ்ண தேவர்களுடன் கூடி ஆலோசித்த தலம், நரசிம்ம அவதார கோலம் காட்டிய தலம், அத்துடன் விஷ்ணு நின்ற, கிடந்த, இருந்த, நடந்த ஆகிய நான்கு கோலங்களில் காட்டியருளியதோடு இங்கேயே எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலுக்கு கடந்த 1961, 1992, 2004 ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது தங்க விமானத் திருப்பணி தவிர்த்து மற்ற திருப்பணி நடந்து 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேம் நடைபெற்றது.

மார்ச் 23ல் 32 வேதிகை, 44 குண்டங்களுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. பிரதான பட்டாச்சார்யர் ராமகிருஷ்ணன் தலைமையில் 60 பட்டாச்சார்யர்கள் பூஜைகள் செய்ய, நேற்றுடன் ஏழு கால யாகபூஜைகள் பூர்த்தியாகின்றன. இன்று அதிகாலை 5:00 மணிக்கு பூஜைகள் துவங்கி 8:05 மணிக்கு 8ம் கால யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து கலசங்கள் புறப்பாடாகி காலை 9:38 மணியிலிருந்து காலை 10:32 மணிக்குள் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் அலங்கார திருவாரதனம் நடைபெறும். காலை 11:50 மணிக்கு ஸர்வ தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு சுவாமி தங்க கருட வாகனத்திலும், திருக்கோட்டியூர் நம்பிகள், எம்பெருமானார் தங்கப்பல்லக்கிலும் திருவீதிப் புறப்பாடு நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar