வேடசந்தூர்: வேடசந்தூர் மாரியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாதத்தை முன்னிட்டு ஆண்டு திருவிழா மிக சிறப்பாக நடந்தது. கரகம் பாலித்தல், மாவிளக்கு, அக்கினி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், நேற்று மாலை பூக்குழி இறங்கும் விழா நடந்தது.
மாரியம்மன் கோவிலுக்கு வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூக்குழி இறங்கினர். சிலர் தங்களது குழந்தைகளுக்கான வேண்டுதல் நிறைவேறிய நிலையில் குழந்தைகளை தூக்கிக்கொண்டு தீக்குளி இறங்கினார். நேற்று முன்தினம் இரவு வேடசந்தூர் அனைத்து வர்த்தக சங்கம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் சார்பில், சின்னத்திரை கலைஞர்கள் பங்கேற்ற திரையிசை பாடல்களின் பொற்காலம் கண்ணதாசன் காலம் வரையா, கண்ணதாசன் காலத்திற்கு பின்பா என்ற பட்டிமன்றம் நடைபெற்றது. நேற்றைய பூக்குழி விழாவின் போது, கோயில் நிர்வாகிகள் மற்றும் வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்தி ராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் உள்ளிட்ட திரளான மக்கள் பங்கேற்றார்.