Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூய மிகாவேல் ஆலய பிரதிஷ்டை விழா மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்! மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் அடாவடி கட்டணம் வசூலிப்பால் பக்தர்கள் அதிருப்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 செப்
2012
10:09

வத்திராயிருப்பு: சதுரகிரி தாணிப்பாறையில் அரசு இடங்களில் நிற்கும் வாகனங்களிலும், தனியார் வாகன காப்பக ஏலதாரர்கள் நுளைந்து, அடாவடியாக கட்டணம் வசூலிப்பதால், பக்தர்கள் அதிருப்தியடைகின்றனர். சதுரகிரி மலையில் ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், தமிழகம் முழுவதுமிருந்து, ஏராளமான பக்தர்கள், டூரிஸ்ட் பஸ், லாரி, வேன், கார், டூவிலர் என, பல்வேறு வாகனங்களில் வருகின்றனர். தாங்களது வாகனங்களை அடிவாரமான தாணிப்பாறை கோயில் இடம், வனத்துறைக்கு சொந்தமான இடம், தனியார் வாகன காப்பகத்தில் நிறுத்துகின்றனர். கோயில் இடத்தில் நிற்கும் வாகனங்களுக்கு, கோயில் நிர்வாகம் , கடந்தஆண்டுமுன்பு வரை, காப்பக ஏலம் நடத்தியது. இந்த ஆண்டு அங்கு சர்வே பணிகள் நடைபெறவுள்ளதால் ,பலமாதங்களாக காப்பக ஏலம் விடவில்லை. இதை பயன்படுத்தி, அருகில் உள்ள தனியார் வாகன காப்பகங்களை சேர்ந்தவர்கள், கோயில், வனத்துறை இடங்களில் நிற்கும் வாகனங்களுக்கும், அடாவடியாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். 24 மணி நேரத்திற்கு பஸ்களுக்கு 100, வேன்களுக்கு 80, கார், ஜீப்களுக்கு 50, இதர வாகனங்களுக்கு 10ரூபாய் வீதம் வசூலிக்கின்றனர். 24 மணி நேரத்தை தாண்டி, ஒருமணி நேரம் கூடுதலானலும், அதற்கும் சேர்த்து, அரைநாள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த அடாவடி வசூலால், பக்தர்கள் கடும் அதிருப்தி அடைகின்றனர். திண்டிவனத்தை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், "இது அரசு காப்பகம் என நினைத்து தான் டிக்கட்டை வாங்கினோம். ஆனால் ரசீதை பார்த்த பிறகுதான், தனியார் காப்பகம் என தெரிந்து கொண்டோம். ஒருமணி நேரம் கூடுதலானதற்கு ,அரைநாள் கட்டணம் போட்டு, எங்களிடம் தகராறு செய்து வசூலித்தனர். எத்தனையோ இடங்களுக்கு
சுற்றுலா சென்றுள்ளோம் இதுபோல் எங்கும் கட்டணம் வசூலித்ததில்லை, என்றனர். நிர்வாக அதிகாரி குருஜோதியிடம் கேட்டபோது,""இதுவரை புகார் வரவில்லை, விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar