Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேதை தர்ஹாவில் மதநல்லிணக்க விழா! தஞ்சாவூர் பெரிய கோவில் நடராஜர் சிறப்பு அபிஷேகம்! தஞ்சாவூர் பெரிய கோவில் நடராஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி அதிதூதர் பெருவிழாவில் தேர்பவனி கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2012
10:09

தென்காசி: தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பெருவிழாவில் தேர்பவனி நடந்தது. தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் அதிதூதர் பெருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் மாலையில் திருப்பலி, மறையுரை நடந்தது. விழாவின் எட்டாம் நாள் இரவில் நற்கருணை பவனி நடந்தது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று காலையில் சூளைமேடு உதவி பங்கு தந்தை சில்வெஸ்டர் திருப்பலி நடத்தினார். கொடைக்கானல் மறைமாவட்ட அதிபர் இக்னேசியஸ் பால் மறையுரை வழங்கினார். மதியம் புனலூர் மறை மாவட்ட ஆயர் செல்விஸ்டர் பொன்னுமுத்தன் மலையாளத்தில் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் திரளான கேரள இறைமக்கள் கலந்து கொண்டனர். மாலையில் பாளை., குருகுல முதல்வர் ஜோமிக்ஸ் திருப்பலி நடத்தினார். இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் அதிதூதர் எழுந்தருளினார். பின்னர் தேர்பவனி நடந்தது. தென்காசி பங்குதந்தை வியாகப்பராஜ், உதவி பங்குதந்தை வினோத்பால்ராஜ் மற்றும் திரளான இறைமக்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடியபடியே தேர் பவனியில் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று (29ம் தேதி) பெருவிழா நடக்கிறது. காலையில் கடையம் பங்குதந்தை ஆரோக்கியசாமி, மேலமெஞ்ஞானபுரம் பங்குதந்தை அலாய்சியஸ் துரைராஜ், நவதுறவியர் இல்லம் அதிபர் வின்சென்ட் (மலையாளத்தில்), மதியம் ஆவுடையானூர் பங்குதந்தை அருள்ராஜ் திருப்பலி நடத்துகின்றனர். காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலியை பாளை., மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் நடத்துகிறார். மாலையில் பாளை., ஆயர் இல்லம் அமல்ராஜ் சிறப்பு திருப்பலி நடத்துகிறார். நாளை (30ம் தேதி) கொடியிறக்கம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar