வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திருக்கனூரில் அன்னதானம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2012 10:10
புதுச்சேரி: வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, திருக்கனூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.திருக்கனூர் சன்மார்க்க சங்கம் சார்பில், வள்ளலார் பிறந்த நாள் விழா, திருக்கனூரில் நேற்று கொண்டாடப்பட்டது. வள்ளலாரின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு, சன்மார்க்க சங்க பொதுச் செயலாளர் முத்துரங்கம் தலைமையில், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் கோடி செல்வம், சுந்தரமூர்த்தி, ஆனந்தன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.