மழை வேண்டி அய்யனார்சாமிக்கு குதிரை எடுத்து வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2012 10:10
தேவதானப்பட்டி: சில்வார்பட்டி விவசாயிகள் சார்பில், மழை வேண்டி அய்யனார்சாமிக்கு குதிரை எடுத்து வழிபட்டனர். பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டியில் சிறுகுளம் கண்மாய் பாசனம் மூலம் முதல்போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் பருவமழை பெய்யவில்லை. கண்மாய்க்கு நீர் வரத்து இல்லாததால் வறண்டு கிடக்கிறது. நாற்றாங்கால் பணியை மேற்கொள்ள முடியவில்லை. மழை வேண்டி அய்யனார் சாமிக்கு குதிரை எடுக்கும் விழா நடந்தது.வேளாளர் வீட்டில் இருந்து குதிரை எடுத்து வரப்பட்டு, ஆஞ்சநேயர் கோயிலில் கண் திறந்து, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, குதிரை விளையாடியது. அதன் பிறகு சிறுகுளம் கண்மாய்கரையில் உள்ள அய்யனார்சாமி கோயிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.