Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழாவில் பங்கேற்க ... திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் திருவிழா! திருப்பரங்குன்றத்தில் வேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி பகவதியம்மன் நவராத்திரி விழா வரும் 15ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 அக்
2012
10:10

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா வரும் 15ம் தேதி துவங்குகிறது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி திருவிழா வரும் 24ம் தேதி அம்பாள் கொலுமண்டபத்தில் எழுந்தருளலும், 8 மணிக்கு கன்னியா பூஜையும், 9மணிக்கு பஜனையும், 10மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 7.30க்கு பக்தி இன்னிசை, 8.30க்கு பக்திமெல்லிசை, 9க்கு தேவி வெள்ளி கலைமான் வாகனத்தில் திருக்கோயில் சுற்றி பவனி வருதலும் நடக்கிறது. இரண்டாம் நாள் திருவிழாவான 16ம் தேதி முதல் ஒன்பதாம் நாள் திருவிழாவான 23ம் தேதி வரை தினமும் காலை 5 மணிக்கும், 10 மணிக்கும் சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக நிகழ்ச்சிகள், இரவு ஒன்பது மணிக்கு அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருக்கோயில் வலம் வருதலும் நடக்கிறது. பரிவேட்டை: நவராத்திரி திருவிழாவின் 10ம் நாளான 24ம் தேதி பரிவேட்டை நடக்கிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 4.30க்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு தேவி அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்தலும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம், தேவி வெள்ளிக்குதிரை வாகனத்தில் வேட்டைக்கு புறப்படுதல் நடக்கிறது. தேவி வேட்டைக்கு புறப்படும் போது, ஸ்ரீதேவி கன்னியாகுமரி பக்தர்கள் சங்கம் சார்பில் யானை ஊர்வலம், குதிரை ஊர்வலம், முத்துக்குடைஊர்வலம், நாதஸ்வரம், பஞ்சவாத்தியம், செண்டைமேளம், பொம்மலாட்டம், பஜனை மற்றும் கேரள புகழ் தையல் ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுடன் அம்பாள், கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், ஒற்றைபுளி, பாலசுப்ரமணியபுரம், மகாதானபுரம், வழியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்து மாலை 6 மணியளவில் பரிவேட்டை மண்டபம் அருகே அம்பாள் அம்பு எய்து கலிவேட்டையாடுகிறார். பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் வழியாக கோயில் திரும்புகிறார். முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுக்கு பின்னர் கோயில் வருகிறார். ஏற்பாடுகளை இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில், தேவசம் போர்டு கண்காணிப்பாளர் ஸ்ரீமூல வெங்கடேசன், கோயில் மேலாளர் சோணாச்சலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar