சாத்தன்குளம்: சாத்தான்குளம் கருப்பசாமி கோயில் கொடை விழா இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாள் அதிகாலை கும்பாபிஷேகமும் இரவு குடியழைப்பும் நடந்தது. இரண்டாம் நாள் காலை சாத்தான்குளம் ஸ்ரீஅழகம்மன் கோயிலிருந்து சுவாமிக்கு தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. மதிய கொடை உச்சிகால அலங்கார பூஜையும் சவாமி வீதி உலாவும் நடந்தது. மதியம் அன்னதானமும் இரவு சாமக் கொடையும் நடந்தது. கலயைரங்கில் சிலம்பகலை நிகழ்ச்சிகள் நடந்தது. கொடைவிழா ஏற்பாடுகளை சாத்தான்குளம் தட்டார் மேலத்தெரு ஸ்ரீகருப்பசாமி திருக்கோயில் விழாகமிட்டியார் செய்திருந்தனர்.