Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் 18 ம் நூற்றாண்டு செப்பேடு ... திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் கோயிலுக்கு திரும்பினார்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் கோயிலுக்கு திரும்பினார்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2024
04:04

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பூ பல்லக்கில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து படி கோயிலுக்கு திரும்பினார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் உள்ளது. இங்கு ஏப்.18 அன்று காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்கி நடந்தது. ஏப்.22 பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வெள்ளி கிண்ணத்தில் அவள் பாயாசம் சாப்பிட்டபடி வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் அருள் பாலித்தார். மறுநாள் குதிரை வாகனம், சேஷ வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து தசாவதார காட்சி நடத்தினார். மேலும் ராஜாங்க திருக்கோலத்தில் முத்து பல்லக்கில் அருளினார். இன்று காலை 7:00 மணிக்கு பெருமாள் மீண்டும் கோடாரி கொண்டையிட்டு, தங்க நெல்மணி தோரணங்கள் சூடிக்கொண்டு வளரி, தடியென அனைத்து வகையான ஆயுதங்களுடன் கருநீள பட்டுடுத்தி பூப்பல்லக்கில் அமர்ந்தார். தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து கிளம்பி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். பெருமாளுக்கு தேங்காய் உடைத்து வழிநெடுகிலும் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு அழகர் காவல் தெய்வம் கருப்பண சுவாமியிடம் சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தது. அப்போது மலர் தூவி பல ஆயிரம் பக்தர்கள் வெள்ளத்தில் கோவிந்தா கோஷம் விண்ணதிர திருக்கோயிலை அடைந்தார்.  நாளை காலை பெருமாளுக்கு உற்சவ சாந்தி திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
 ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar